திருப்பூர் மாவட்டத்தில் நாளை ஜமாபந்தி துவக்கம்

திருப்பூர் மாவட்ட அளவிலான ஜமாபந்தி நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது.

Update: 2021-06-23 03:25 GMT

திருப்பூர் கலெக்டர் வினீத்

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், காங்கேயம், அவிநாசி, தாராபுரம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட 9 தாலுகாக்களில், 350 வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி, நாளை 24 ம் தேதி துவங்கிறது. இந்த ஜமாபந்தியை 2 நாட்களில் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதில், அவிநாசி தாலுகாவுக்கு கலெக்டர் வினீத் ஜமாபந்தி அலுவலராக செயல்படுவார். ஏழு வருவாய் கிராமங்களை மட்டுமே கொண்டுள்ள, திருப்பூர் வடக்கு தாலுகாவில் மட்டும், நாளை  24 ம் தேதி ஒரே நாளில் முாகம் நடக்கிறது.

பொதுமக்கள் தங்களது ஜமாபந்தி விண்ணப்பங்களை gdp:tn.gov.in/jamabandhi என்றஇணையதளத்தில் அனுப்பலாம் என, திருப்பூர்  மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News