விசைத்தறியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு

விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாய சங்கம், ஏர்முனை இளைஞர் அணி ஆதரவு அளிக்கிறது.

Update: 2022-01-23 14:05 GMT

பைல் படம்.

இதுகுறித்து தமிழக விவசாய சங்கம் மாநில தலைவர் சண்முகம், மாநில துணை தலைவர் சுரேஷ் ஆகியோர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வேளாண்மை தொழிலுக்கு மாற்றாக கோவை திருப்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ள பிரதான தொழில் விசைத்தறி ஆகும். நீண்ட காலமாக தங்கள் வாழ்வாதாரம் காக்கப்பட கூலி உயர்வு வேண்டி போராடி வருகிறார்கள். இருந்தபோதும் இதுவரை எந்த நியாயமான தீர்வும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 09.01.22 தேதி முதல் கூலி உயர்வு கிடைக்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் விசைத்தறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறார்கள். கடும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ள இந்த சூழலில் விசைத்தறியாளர்களின் நியாமான கோரிக்கையை நிறைவேற்றிட முதல்வர் நேரடியாக தலையிட்டு சுமூக தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும்.

நாளை (திங்கள்கிழமை) காலை 10 மணி அளவில் காரணம்பேட்டை நால்ரோட்டில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாய சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி ஆதரவு அளிக்கிறது. மேலும் விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை துணை நிற்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.


Tags:    

Similar News