திருப்பூரில் வடிகால் அமைக்கும் பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ

திருப்பூர் கொங்கு நகரில் நடைபெற்று வரும் வடிக்கால் அமைக்கும் பணியை எம்எல்ஏ., செல்வராஜ் ஆய்வு செய்தார்.

Update: 2021-09-29 13:05 GMT

திருப்பூர் கொங்கு நகரில் நடைபெற்று வரும் வடிக்கால் பணியை எம்எல்ஏ செல்வராஜ் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பலத்த மழை பெய்ததால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. சமீபத்தில் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டது. விரைவில் பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநகர பகுதியில் வடிக்கால் வசதி பணிகளை எம்எல்ஏ., செல்வராஜ் ஆய்வு செய்தார். கொங்கு மெயின் ரோட்டில் நடைபெற்று வரும் கழிவுநீர் வடிககால் பணி குறித்தும், விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News