திருப்பூரில் மிலாடி நபி விழா: இஸ்லாமிய குழந்தைகள் பேரணி

மிலாடி நபி பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூரில் இஸ்லாமிய குழந்தைகளின் பேரணி நடந்தது.

Update: 2021-10-19 13:00 GMT

மிலாடி நபி விழாவை முன்னிட்டு திருப்பூரில் இஸ்லாமிய குழந்தைகளின் பேரணி நடந்தது.

திருப்பூர் காங்கயம் ரோட்டில் காயிதே மில்லத் நகர் பகுதியில் உள்ள ஹிஸ்னும் இஸ்லாம் சுன்னத் வல் ஜமாத் சார்பில் நபி புகழ் பாடு பேரணி நடத்தப்பட்டது. பேரணிக்கு இமாம் அப்துல்லா தலைமை வகித்தார். பள்ளியின் தலைவர் சலீம் துவக்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமிகள் பதாகைகள் ஏந்தியவாறு சென்றனர். இறுதியாக கூட்டு பிரார்த்தனையுடன் பேரணி முடிந்தது.


Tags:    

Similar News