திமுக., தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாமல் ஏமாற்றுகிறது: பாஜக., செயற்குழு தீர்மானம்

திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது என பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2021-11-24 15:45 GMT

திருப்பூரில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா பேசினார்.

பாஜக.,மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரில் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கொரோனா தொற்றை வெற்றிக் கண்டு, மக்களின் வாழ்வாரதாரத்தை மேம்படுத்தி உலக அளவில் தேசத்தின் மதிப்பை உயர்த்தி வரும் பிரதமர் மோடிக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிப்பது. திமுக., அரசின் அணுகுமுறைகள் மற்றும் செயல்பாடுகள் மிகவும் கண்டிக்கதக்கது. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளை கட்டித்தர வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் திமுக அரசு தொடர்ந்து ஹிந்து கலாச்சாரம், நம்பிக்கைகள் மற்றும் கோவில்களின் நலன்களுக்கு விரோதமாக செயல்படுகிறது. 2021 ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News