திருப்பூரில் 1 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

திருப்பூரில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது.

Update: 2022-01-05 14:42 GMT

பைல் படம்.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (5ம் தேதி) கொரோனாவால் 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் 56 பேராக உள்ளது.  மருத்துவமனை மற்றும் வீடுகளில்  495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒருவர் உயிரிழந்தார்.

மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 98,936 என ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது.  குணமடைந்தவர்கள்–97413 பேராகவும், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,028 ஆக உள்ளது.

Tags:    

Similar News