திருப்பூர்: வாகனம் மோதி டூவீலரில் சென்ற இருவர் பலி

திருப்பூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், டூவீலரில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.

Update: 2021-05-10 06:57 GMT

திருப்பூர் பாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அஜய் மற்றும் ராஜேஸ். இவர்கள் இருவரும், ஊத்துக்குளி  அருகே வெள்ளியம்பாளையம் பகுதியில், டூ வீலரில் சென்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம்  ஒன்று, அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில், அஜய் சம்பவ இடத்தில் பலியானர். பலத்த காயமடைந்த ராஜேஷ், திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி பலியானார். விபத்து குறித்து, ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


#instanews #tamilnadu #tiruppur #accident #dead #ஹாஸ்பிடல் #roadaccident #injury #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #திருப்பூர் #விபத்து #சாலைவிபத்து #வாகனம் #hospital #மருத்துவமனை

Tags:    

Similar News