அவிநாசி: வஞ்சிப்பாளையத்தில் ஏப். 21ம் தேதி மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, அவிநாசி அடுத்த வஞ்சிபாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 21ம் தேதி மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

Update: 2021-04-19 05:06 GMT


இது தொடர்பாக, வஞ்சிப்பாளையம் உதவி மின் பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வஞ்சிப்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வஞ்சிப்பாளையம், கணியாம்பூண்டி, வெங்கமேடு, வளையபாளையம், சாமந்தன்கோட்டை, அனந்தாபுரம், செம்மாண்டாம்பாளையம், செம்மாண்டாம்பாளையம் புதூர், கோதபாளையம், முருகம்பாளையம், காவிளிபாளையம், சோளிப்பாளையம், 15 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில், வரும் 21.04.2021  புதன் கிழமை, காலை 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் தடைபடும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News