பல்லடம் நகராட்சி சார்பில் மீண்டும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு

பல்லடம் நகராட்சி சார்பில், பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2021-12-21 04:00 GMT

பல்லடம் நகராட்சி சார்பில், பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சியில் மீண்டும் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. நகராட்சி ஆணையர் விநாயகம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஹேமலதா விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

நகராட்சி வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், துப்புரவு ஆய்வாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.''பிளாஸ்டிக் மாசினை ஒழிப்போம்; நலமான தமிழகத்தை உருவாக்குவோம்; மண், நீர் வளம் காப்போம்'' என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியபடி, மாணவர்கள், மங்கலம் ரோடு, என்.எச்., ரோடு,என்.ஜி.ஆர்., ரோடு வழியாக பேரணி நடத்தினர். பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், நகராட்சி பணியாளர்கள் உடன் பங்கேற்றனர்.

Tags:    

Similar News