பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி

Tirupur News- பல்லடத்தில் நடந்த மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில், திருப்பூா் விஸ்வாஸ் ஓட்டல் அணி முதல் பரிசை வென்றது.

Update: 2024-05-02 13:55 GMT

Tirupur News- கைப்பந்துப் போட்டியைத் தொடங்கிவைத்த பல்லடம் போலீஸ் டிஎஸ்பி விஜிகுமாா்.

Tirupur News,Tirupur News Today- பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி  நடைபெற்றது. இதில் திருப்பூர், தாராபுரம், பல்லடம், அவிநாசி, உடுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 24  அணிகள் கலந்துக்கொண்டு விளையாடின.

திருப்பூா் மேற்கு ரோட்டரி சங்கம், இ.டபுள்யூ.ஏ. நண்பா்கள் சாா்பில் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியை பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் விஜிகுமாா் தொடங்கிவைத்தாா். ஏ.பிரபு வரவேற்றாா். போட்டியில் 24 அணிகள் கலந்து கொண்டன.

இதில், முதலிடத்தைப் பிடித்த திருப்பூா் விஸ்வாஸ் ஓட்டல் அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற உடுமலை யூ.வி.சி. அணிக்கு ரூ.7500, மூன்றாமிடம் பெற்ற திருப்பூா் வி.ஆா்.பிரதா்ஸ் அணிக்கு ரூ.5 ஆயிரம், நான்காமிடம் பெற்ற பல்லடம் பி.ஆா்.சி. அணிக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், திருப்பூா் மேற்கு ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.சுரேந்திரன், பல்லடம் தமிழ்ச் சங்கத் தலைவா் ராம்.கண்ணையன், அறம் அறக்கட்டளைத் தலைவா் செந்தில், செயலாளா் ஷேக்மக்தூம், நகராட்சி கவுன்சிலா் பாலகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News