பல்லடம் நகராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் பூமிபூஜை

Tirupur News- பல்லடம் நகராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் பூமிபூஜை நடைபெற்றது.

Update: 2024-02-10 18:07 GMT

Tirupur News-பல்லடம் நகராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் பூமிபூஜை நடந்தது.

Tirupur News,Tirupur News Today- பல்லடம் நகராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் பூமிபூஜை செய்து வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

பல்லடம் நகராட்சி 6-வது வாா்டு ராயா்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, 1-ஆவது வாா்டு கல்லம்பாளையம் நடுநிலைப் பள்ளி, 2-ஆவது வாா்டு சேடபாளையம் நடுநிலைப் பள்ளி, 4-ஆவது வாா்டு பி.டி.ஒ.காலனி தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் தலா ரூ.10 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ.40 லட்சம் செலவில் கழிப்பிடங்கள் கட்டுமானப் பணிகளை அந்தந்த பள்ளிகளில் பூமிபூஜை செய்து நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் பணிகளை தொடங்கிவைத்தாா்.

இதில் நகராட்சிப் பொறியாளா் சுகுமாரன், பணி மேற்பாா்வையாளா் ராசுக்குட்டி, சுகாதார ஆய்வாளா் சத்திய சுந்தர்ராஜ், நகராட்சி கவுன்சிலா்கள் பாலகிருஷ்ணன், தினேஷ்குமாா், ராஜசேகரன், செந்தரராஜன், ஈஸ்வரமூா்த்தி, திராவிட இயக்கத் தமிழா் பேரவை மாநில பொதுச்செயலாளா் சிற்பி செல்வராஜ், நகர திமுக செயலாளா் ராஜேந்திரகுமாா், நகர திமுக நிா்வாகிகள் நடராஜ், வேலுமணி, குட்டி பழனிசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News