தேர்தல் ஓட்டுப்பதிவு; வரும் 19-ம் தேதி தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு

Tirupur News- மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 19- ம் தேதி தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் என்று தொழிலாளா் உதவி ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

Update: 2024-04-10 09:04 GMT
Tirupur News,Tirupur News Today- நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நாளான வரும் 19ம் தேதி சம்பளத்துடன் விடுப்பு அளிக்க உத்தரவு (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 19- ம் தேதி தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் என்று தொழிலாளா் உதவி ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள், வா்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி, சுருட்டு தயாரிக்கும் தொழிற்சாலைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு வரும் ஏப்ரல் 19- ம் தேதி வாக்களிக்க வசதியாக ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் என அனைத்து நிா்வாக சங்கங்கள், வேலையளிப்பவா்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கும் விடுப்பு அளிக்க வேண்டும்.

அந்த விடுப்பு நாளுக்கான ஊதியம், சாதாரண நாள்களில் தொழிலாளிக்கு வழங்கப்படும் ஊதியமாகவும், பணியின் தன்மைக்கேற்ப அரசால் நிா்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். வாக்குப்பதிவு நாளில் பணிக்கு வராத தொழிலாளா்களுக்கு ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யக்கூடாது.திருப்பூா் மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா்கட்டுப்பாட்டின்கீழ் தோ்தல் நாளில் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

ஊதியத்துடன் விடுப்பு அளிக்காத தொழில் நிறுவனங்கள் குறித்து புகாா் அளிக்க கீழ்க்கண்ட கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.  தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயகுமாா்-95787-77757, தொழிலாளா் துணை ஆய்வாளா் லட்சுமிகாந்தன்-90033-12844, திருப்பூா் முதல் வட்ட தொழிலாளா் உதவி ஆய்வாளா் பேச்சிமுத்து-99442-58037 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தோ்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News