தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்

தாராபுரத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-12-11 16:30 GMT

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த சகுனிபாளையம் பிரிவு சாலை பகுதியில், குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்வதாக, தாராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (52) குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 100 பாக்கெட் குட்கா பறிமுதல் செய்தனர். 

Tags:    

Similar News