தாராபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார்

தாராபுரத்தில் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி துவக்கி வைத்தார்.

Update: 2021-09-12 09:01 GMT

தாராபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார்

இன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை தாராபுரம் சார் ஆட்சியர் ஆனந்த், மோகன் மற்றும் ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி மத்திய பேருந்து நிலையம், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமினை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார். பின்னர்  பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News