பொது முடக்கம்: வெறிச்சோடிய தாராபுரம்

பொது முடக்கத்தால், தாராபுரம் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Update: 2022-01-16 11:00 GMT

வெறிச்சோடிய தாராபுரம் நகர வீதி.

கொரோனா ஊரடங்கால், நேற்று பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தாராபுரம் பகுதியில் காய்கறி, மளிகைக் கடைகள், வணிக நிறுவனங்கள், சினிமா தியேட்டர் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. வாகனங்கள் இயங்கவில்லை. பொது வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், எந்நேரமும் பரபரப்பாக இருக்கும் தாராபுரம் நகர சாலைகள் வெறிச்சோடி இருந்தன. அதே போன்று பல்லடம், உடுமலைப்பேட்டை, அவினாசி உள்ளிட்ட நகரங்களிலும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Tags:    

Similar News