ஜிஎஸ்டி வரி உயர்வு: தாராபுரத்தில் ஜவுளிக்கடைகள் அடைப்பு

ஜி.எஸ்.டி., வரி உயர்வை கண்டித்து, தாராபுரத்தில் ஜவுளிக்கடைகளை அடைத்து, போராட்டம் நடைபெற்றது.

Update: 2021-12-24 01:15 GMT

கோப்பு படம் 

ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி., வரியை, வரும் ஜனவரி, முதல் தேதியில் இருந்து, 5 சதவீதத்தில் இருந்து, 12 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதற்கு ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஜவுளிக்கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜி.எஸ்.டி., வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று, ஜவுளி கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் மற்றும் டெய்லர்கள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 150க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

தாராபுரம் ஜவுளிக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகவேல் தலைமையில், வியாபாரிகள் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஜி.எஸ்.டி. வரியை குறைக்க கோரி, கோட்டாட்சியரிடம் மனு வழங்கினர்.

Tags:    

Similar News