தாராபுரம் நகர மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா

தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-01-26 06:30 GMT

தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், குடியரசு தினவிழாவை முன்னிட்டு, தலைவர் எஸ்.வி. செந்தில்குமார், கொடியேற்றினார். மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மன்ற உறுப்பினர்கள், அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.

 தாராபுரம் நகராட்சியில், குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

இதே போன்று, தாராபுரம் நகராட்சியில், குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. நகராட்சி வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில், நகராட்சி கமிஷனர் ராமர், தேசியக்கொடி ஏற்றினார். ஊழியர்கள் மற்றும் விழாவில் பங்கேற்றவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மகாத்மா காந்தி, உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. நகராட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News