தாராபுரம் தொகுதியில் பா.ஜ.க தலைவர் எல்.முருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Update: 2021-03-18 09:07 GMT

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்ய தாராபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் இருந்து வாகனம் மூலம் பேரணியாக சென்றார்.

இவருக்கு அதிமுக, பாஜக தொண்டர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருபுறமும் கூடி நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். பேரணியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி மகேந்திரன், பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு 100 அடி தொலைவில் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டதால் எல்.முருகன், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்பி மகேந்திரன் என மூவர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளே சென்றனர்.

தாராபுரம் சார் ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமாரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் டெப்பாசிட் தொகையாக 5 ஆயிரம் ரூபாயை அனைத்து தொகுதியிலும் இருந்து தொண்டர்களிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட 2, 5, 10 ரூபாயாக செலுத்தினார்.



Tags:    

Similar News