மறைந்த முப்படை தளபதிக்கு அஞ்சலி

ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணமடைந்தவர்களுக்கு அவினாசியில் உள்ள பள்ளி மாணவியர், மலர் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2021-12-13 13:30 GMT

அவிநாசி புனித தோமையார் பெண்கள் பள்ளியில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

நீலகிரி மாவட்டம் குன்னுாரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராய், அவரது மனைவி மற்றும் 13 ராணுவ வீரர்களின் ஆன்மா சாந்தியடைய, திருப்பூர் மாவட்டம், அவினாசி புனித தோமையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவியர் பிரார்த்தனை செய்தனர். இறந்தவர்களின் உருவபடத்துக்கு பள்ளி மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். ராணுவ வீரர்களின் தியாகப்பணி குறித்து, மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.

Tags:    

Similar News