அவினாசி: தோட்டத்தில் 9 மயில்கள் பலியானது எப்படி? வனத்துறை விசாரணை

அவினாசி அருகே, தோட்டத்தில் 9 மயில்கள் பலியான விவகாரம் குறித்து, வனத்துறையினர் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Update: 2022-03-15 10:15 GMT

இறந்த மயில்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள். 

அவினாசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குப்பாண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊஞ்சப்பாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ள விவசாய தோட்டத்தில், 9 மயில்கள் இறந்து கிடப்பதாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், இறந்த மயில்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மயில்கள் விஷம் வைத்து கொல்லபட்டனவா அல்லது, வேறு காரணம் உள்ளதா என வனத்துறையினர் விசாரிக்கின்றனர். 

Tags:    

Similar News