தேசிய நுகர்வோர் உரிமை தின விழா

திருமுருகன்பூண்டி கன்ஸ்யூமர் அசோசியேஷன் சார்பில் நடந்த நுகர்வோர் தின விழாவில் சிறப்பாக செயல்பட்டோருக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.

Update: 2021-12-26 08:00 GMT

நுகர்வோர் தின விழாவில் சிறப்பாக செயல்பட்டோருக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது. 

திருமுருகன் ரோட்டரி கிளப் ஹாலில், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு துறை, தி கன்ஸ்யூமர்ஸ் கேர் அசோசியேசன் திருமுருகன் பூண்டி ரோட்டரி கிளப், அவிநாசி கிழக்கு ரோட்டரி கிளப், நிட் சிட்டி ரோட்டரி கிளப், ஆனந்தம் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து, தேசிய நுகர்வோர் உரிமை தின விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தின.

மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு, குடிமக்களின் ஒத்துழைப்பு குறித்து பேசினார். மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். எல்.பி.ஜி.,கேஸ் விநியோகஸ்தர் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.

திருமுருகன்பூண்டி ரோட்டரி கிளப் தலைவர் முகம்மது ஜாபர், மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கு பாராட்டு கேடயம் வழங்கினார். நுகர்வோர் பாதுகாப்பு சேவைகளை பாராட்டி, தி கன்ஸ்யூமர்ஸ் கேர் அசோசியேசன் தலைவர் காதர்பாட்சா துணை தலைவர் அவனாசிலிங்கம், பொது செயலர் ராமலிங்கம், அமைப்பு செயலர் கிருஷ்ணமூர்த்தி, சட்ட ஆலோசகர் வக்கீல் சதாசிவம் உள்ளிட்டோருக்கு, அதிகாரிகள் கேடயம் வழங்கினர்.

அவிநாசி கிழக்கு ரோட்டரி தலைவர் விசித்ரா, வக்கீல் கவிதா ஆகியோர் பேசினர். கன்ஸ்யூமர் சங்க செயற்குழு உறுப்பினர் தனசேகர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News