ஆடு, கோழிகளை கடித்து குதறிய தெரு நாய்கள்

அவினாசி அருகே, நாய்கள் கடித்து குதறியதில், ஆடு, கோழிகள் பலியாகின.

Update: 2021-12-15 07:45 GMT

நாய்களால் கடிபட்டு இறந்த ஆடுகள். 

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகேயுள்ள சின்னேரிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட வளையபாளையம், முள்ளிக்காடு பகுதியில் சுறறித்திரியும் நாய்கள், அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஆடு, கோழிகளை கடித்து கொன்று விடுகின்றன. கடந்த, வாரம், 16 கோழிகளை கடித்து கொன்றன. நேற்று, 6 ஆடுகளை கடித்ததில், அவை இறந்தன. ஏழு ஆடுகள் காயமடைந்தன. அப்பகுதியில் உள்ள இறைச்சிக்கடையில் இருந்து வெளியேறும் இறைச்சி கழிவுகளை உண்டு பழகிய நாய்கள், ஆடு, கோழிகளை தாக்குகின்றன என, அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News