அவினாசியில் நாளை மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

அவினாசியில், நாளை (8ம் தேதி) மின் நுகர்வோர் குறை கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.

Update: 2021-12-07 15:15 GMT

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை, 11:00 மணியளவில், மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர், இக்கூட்டத்தில் பங்கேற்று, மின்நுகர்வோரின் குறைகளை கேட்க உள்ளார்.'இந்த வாய்ப்பை, அவிநாசி வட்டார மின்நுகர்வோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என, கோட்ட செயற் பொறியாளர் விஜய ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News