அவிநாசியில் ரூ.2. 91 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள்; துவங்கி வைத்த எம்.பி ஆ. ராசா

Tirupur News- அவிநாசியில் ரூ.2. 91 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை நீலகிரி எம்.பி ஆ.ராசா தொடங்கி வைத்தாா்.;

Update: 2023-10-13 13:34 GMT

Tirupur News- அவிநாசியில் வளர்ச்சி திட்டப் பணிகளை, நீலகிரி எம்.பி ஆ.ராசா துவங்கி வைத்தார்.

அவிநாசியில் ரூ.2. 91 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள்; துவங்கி வைத்த எம்.பி ஆ. ராசா
  • whatsapp icon

Tirupur News,Tirupur News Today- அவிநாசியில் ரூ.2. 91 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா நேற்று தொடங்கிவைத்தாா்.

ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் சேவூா்அருகே ஆலத்தூா் ஊராட்சியில் ரூ.1.25 கோடி மதிப்பில் சமுதாய நலக் கூடம், அவிநாசி பேரூராட்சிக்குள்பட்ட 3- ஆவது வாா்டு ஏரித்தோட்டம் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.1.21 கோடி மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி, 16,17, 18- ஆவது வாா்டு சாலை மையப் பகுதியில் ரூ.45 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆற்றல்மிகு மின் விளக்குகளை திறந்துவைத்தல் என மொத்தம் ரூ.2. 91 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா நேற்று தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவா் பழனிசாமி, பேரூராட்சி செயல் அலுவலா் இந்துமதி, பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, வாா்டு உறுப்பினா் தங்கவேல், பொறுப்பாளா்கள் சரவணன்நம்பி, பால்ராஜ், சிவபிரகாஷ், பழனிசாமி, திராவிடன் வசந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சாலையோர வியாபாரிகளுக்கு விற்பனை வாகனங்கள்

திருமுருகன்பூண்டி நகராட்சிக்குள்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு விற்பனை வாகனங்கள் நேற்று வழங்கப்பட்டன.

திருமுருகன்பூண்டி நகராட்சியில் பதிவுபெற்ற பூ, காய்கறி, பழங்கள், சிற்றுண்டிகள் விற்பனை செய்யும் சாலையோர வியாபாரிகள் 10 பேருக்கு தீனதயாள் அந்தியோதயா யோஜனா, தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சாா்பில் ரூ.9.20 லட்சம் மதிப்பிலான விற்பனை வாகனங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் நா.குமாா் தலைமை வகித்து, பயனாளிக்கு விற்பனை வாகனங்களை வழங்கினாா்.

நகராட்சி ஆணையா் ஆண்டவன், துப்புரவு அலுவலா் செந்தில்குமாா், சுகாதார ஆய்வாளா் செல்வம், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

Tags:    

Similar News