திருப்பூரில் சுற்றும் மான்கள் இடம் மாறுவது எப்போது?

‘திருப்பூரில் சுற்றும் மான்கள், இடம் மாற்றும் பணியை வேகப்படுத்த வேண்டும்’ என, வன விலங்கு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2022-02-23 12:45 GMT

பைல் படம்.

திருப்பூரில் சுற்றும் மான்கள், இடம் மாற்றும் பணியை வேகப்படுத்த வேண்டும்' என, வன விலங்கு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். வன விலங்கு ஆர்வலர் ஒருவர் கூறுகையில்,''திருப்பூரில் நீண்ட நெடுங்காலமாக புள்ளிமான்கள் உள்ளன. தற்போது, அவற்றின் இனப்பெருக்கம் அதிகமாகிவிட்டது. அடர்ந்த வனப்பகுதியில் புள்ளிமான்கள் வாழும் போது, விலங்குகளின் உணவ சங்கிலியில் முக்கிய இடம் பிடிக்கும். அவற்றை அங்கிருந்து பிடித்து, வனப்பகுதிக்குள் விடும் திட்டம், வனத்துறையில் உள்ளது. பேச்சளவில் உள்ள இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர வேண்டும்,'' என்றார்.

Tags:    

Similar News