அவினாசியில் அரசு அலுவலகங்களை மிரட்டும் கொரோனா : அச்சத்தில் ஊழியர்கள்

அவினாசியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தொற்றுப் பரவல் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் அஞ்சமடைந்துள்ளனர்.;

Update: 2022-01-21 14:30 GMT

பைல் படம்

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் தொற்றுப்பரவல் அதிகரித்து வருகிறது. தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள நில அளவை பிரிவில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவினாசி காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர், தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் தீயணைப்பு வீரர் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே, யூனியன் வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

எனவே, 'பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்' என, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.மேலும் பல அரசு அலுவலகங்களில் உள்ளவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஊழியர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

Tags:    

Similar News