புத்தகங்களுடன் புத்தாண்டு: அவினாசியில் நாளை கண்காட்சி துவக்கம்

அவினாசியில், நாளை துவங்கி, மூன்று நாட்களுக்கு புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

Update: 2021-12-30 12:30 GMT

கோப்பு படம் 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், புத்தங்களுடன் புத்தாண்டு என்ற கருத்தை மையமாக வைத்து, 'அவிநாசி புத்தக திருவிழா' பெயரில், புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

நாளை (31ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு, அவிநாசி, வடக்கு ரத வீதியில் உள்ள கோவம்ச சமூகத்தார் மண்டபத்தில் நடக்க இருக்கிறது. வரும், 2ம் தேதி வரை தினமும், காலை, 10:00 மணி முதல், இரவு, 10:00 மணிவரை இக்கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது.

மேலும், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்று பயன் பெற வேண்டும் என, நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News