அவினாசியில் மாநில அளவில் இறகு பந்து போட்டியில் பங்கேற்க அழைப்பு

அவினாசியில், மாநில அளவிலான இரட்டையர் இறகு பந்து போட்டி நடத்தப்பட உள்ளது.

Update: 2021-11-11 14:00 GMT

திருப்பூர் மாவட்டம், அவினாசி,  சையத் பேட்மின்டன் அகாடமி மற்றும் பன் அண்ட் பரோலிக் அகாடமி இணைந்து, மாநில அளவிலான இரட்டையர் இறகு பந்து போட்டிகளை நடத்த உள்ளன. வரும், 14ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, 'பன் அண்டு பரோலிக்' உள்விளையாட்டு அரங்கில், இப்போட்டி தொடங்குகிறது.

இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது. போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள்,  9894933662 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News