நீதிபதிக்கு கொரோனா: அவிநாசி கோர்ட் மூடல்

நீதிபதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் எதிரொலியாக, அவிநாசி மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் 3 நாட்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2021-04-24 12:49 GMT

தமிழகம் முழுவதும் கொரோனா 2 வது அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனாவை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அவிநாசி உள்ள மாவட்ட உரிமையில் நீதிபதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உரிமையில் நீதிமன்றத்தை 3 நாட்கள் மூட உத்தரவிடப்பட்டது.

Tags:    

Similar News