அவினாசியில் சுமூகமாக நடந்த அதிமுக கட்சி கிளை நிர்வாகிகள் தேர்வு

அவினாசியில் அ.தி.மு.க., உட்கட்சி அமைப்பு தேர்தல் அமைதியாக நடைபெற்றது.

Update: 2021-12-23 01:15 GMT

அவினாசி அ திமுக உட்கட்சி தேர்தல் நடந்தது.

அ.தி.மு.க.,வில் உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் அவினாசியில், நகர, ஒன்றிய கிளை செயலாளர், அவைத்தலைவர், துணை, இணை செயலாளர்கள், பொருளாளர், மேலவை பிரதிநிதி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், நகர கழகம், மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியத்துக்கு தனித்தனியாக நடந்த தேர்தலில், ஏற்கனவே பேசி முடித்தபடி, நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிடுவோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். எங்கும், எவ்வித பிரச்னையுமின்றி தேர்தல் நடந்து முடிந்தது.

Tags:    

Similar News