ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் மாேசடி: மறு வாக்கு எண்ணிக்கைக்கு ஆட்சியரிடம் மனு

கங்கை கொண்டான் ஊராட்சி மன்ற தலைவர் போட்டியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த காேரி சுபா என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

Update: 2021-10-26 11:31 GMT

கங்கைகொண்டான் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சுபா.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கங்கை கொண்டான் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுகவினர் தில்லாலங்கடி வேலைகளை செய்து வெற்றி பெற்றுள்ளனர் என்றும் அந்த பகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் சுபா என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- கடந்த 06.10.2021 அன்று நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கங்கை கொண்டான் ஊராட்சி மன்ற தலைவர் பதவியானது பட்டியலின (reserved) பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. மேற்படி தேர்தலில் நான் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டேன். மொத்தம் 13 நபர்கள் கங்கை கொண்டான் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.

கங்கை கொண்டான் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் தி.மு.க. மானூர் ஒன்றிய செயலாளர் அருள்மணியின் மருமகள் (மகனின் மனைவி) P.கவிதா, க/பெ.பிரபாகர் என்பவர் பல்ப் சின்னத்தில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் மொத்தம் 6599 வாக்குகள் பதிவாகியிருந்தது. கடந்த 12.10.2021 அன்று திருநெல்வேலி பேட்டையில் உள்ள ராணி அண்ணா மகளிர் கலைக்கல்லூரியில் வைத்து பதியான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை 12.10.2021ல் காலை 11 மணிக்கு ஆரம்பித்து 13.10.2021 காலை 3 மணி வரை நீடித்தது.

கங்கை கொண்டான் ஊராட்சி மன்றத்தில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளது. மேற்படி 12 வார்டுகளில் 1-வது வார்டு முதல் 10-வது வார்டுகள் வரை உள்ள வாக்கு எண்ணிக்கையின் போது நானே முன்னிலையில் இருந்தேன். வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு செலுத்தும் முத்திரை தலைகீழாக உள்ளது எனவும், 150 வாக்குகளுக்கு மேல் நிராகரிக்கப்பட்டது. அதில் 125 வாக்கு சீட்டுகளில் ஆட்டோ சின்னத்திற்கும் பதிவாகியிருந்தது. எனது முகவர்களால் உரிய ஆட்சேபனை செய்தும் அதை வாக்கு எண்ணும் அலுவலர்கள் கண்டு கொள்ளவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மேலே கூறப்பட்ட அருள்மணி (P.கவிதாவின் மாமனார்) P.கவிதா வாக்கு எண்ணிக்கையில் பின்தங்கி இருப்பதை தெரிந்து வேண்டுமென்றே ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தி P.கவிதாவை எப்படியாவது வெற்றிப்பெற செய்ய வைக்க வேண்டும் என்ற என்னத்தில் பிரச்சினை செய்தார். அதனால் கைகலப்பு ஏற்பட்டது.

மேலும் அருள்மணி மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சுமார் 10 பேர் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்த எனது முகவர்களை மிரட்டி வெளியே அனுப்பியதோடு அங்கிருந்த பலரையும் தாக்கினர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் குழப்பமும், பீதியும் ஏற்பட்டது. இது சம்பந்தமாக வீடியோ ஆதாரம் உள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்கு 13.10.2021 அதிகாலை 02.30 மணியளவில் திருநெல்வேலி மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகளும், அரசால் நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்களும் வந்திருந்தனர். அந்த சமயத்தில் வாக்குகள் முழுவதும் எண்ணி முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் யார் வெற்றி பெற்றார் முன்னிலையில் இருந்த வேட்பாளர் யார் என்ற விபரத்தை தெரிவிக்கவில்லை. அதிகாலை கவிதா 1759 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நான் 1609 வாக்குகள் பெற்று 2-வது இடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஊராட்சி மன்ற தேர்தலில் தனது செல்வாக்கை பயன்படுத்தி திமுகவினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. அது சட்டத்திற்கும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கும் மாறானது. வேண்டுமென்றே தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் மேற்படி அருள்மணிக்கு பயந்து அவருக்கு சாதகமாக செயல்பட்டு உள்ளனர். உண்மையிலேயே நடந்து முடிந்த ஊராட்சி மன்றத் தேர்தலில் 38 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நான் தான்.

எனவே தாங்கள் கருணை கூர்ந்து கங்கை கொண்டான் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் மோசடி செய்து முறைகேடாக செயல்பட்ட P.கவிதாவை வெற்றி பெற்றதாக அறிவித்ததை ரத்து செய்து, மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டு, என்னை கங்கை கொண்டான் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News