நெல்லை அருகே பெண்ணை காதலிப்பதில் போட்டோ போட்டி, வாலிபர் படுகொலை, 4 பேர் கைது

நெல்லை மாவட்டம் கூத்தென்குழியில் பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட போட்டியில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

Update: 2021-08-29 08:23 GMT

நெல்லையில் காதல் போட்டியில் படுகொலை செய்யப்பட்ட அபினேஷ்

நெல்லை மாவட்டம் கூத்தென்குழியைச் சேர்ந்த மீனவர் சிலுவை கித்தேரியான் இவரது மகன் ஆன்றோ அபினேஷ் (20) இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

அந்த பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு (20) என்ற வாலிபரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்குமிடையே அவ்வப்போது முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று ஆன்றோ அபினேஷ்க்கும், சந்துருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஆன்றோ அபினேசை சந்துரு மற்றும் அவரது நண்பர்கள் அறிவாளால் வெட்டியுள்ளனர். இதில் ஆன்றோ அபினேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த கூடன்குளம் போலீசார் இறந்த ஆன்றோ அபினேசின் உடலை கைப்பற்றி உடல் கூறாய்விற்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்து கூத்தென்குழி பகுதியைச் சேர்ந்த சந்துரு (20) , பிரதீஷ் (19), டென்னிஸ் (21), இருதையராஜ் (39) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News