நெல்லையில் கார் கவிழ்ந்து 3 பேர் பலி

நெல்லை மாவட்டம், மன்னார்புரத்தில் மது போதையில் கார் ஒட்டியதால் எதிர்பாரதவிதமாக கார் கவிழந்து மூன்று பேர் பலியாகினர்.

Update: 2021-07-18 16:25 GMT

கவிழ்ந்து கிடக்கும் விபத்துக்குள்ளான கார்.

நெல்லை மாவட்டம், திசையன்விளையில் இருந்து மன்னார்புரத்திற்கு பிரஞ்ச் என்பவரின் மகன் ஸ்டீபன் மதுபோதையில் காரை ஓட்டி வந்துள்ளார். வாகனத்தில் உள்ளே இருந்த ரஜினி, பொன்சேகர், ரெனிஸ், அதிர்ஷ்ட பாலன், செல்வம் ஆகியோர் மது போதையில் இருந்துள்ளனர்.

திசையன்விளையில் இருந்து வந்த கார் மன்னார்புரம் அருகில் வந்துகொண்டிருந்தது. அப்போது தரையில் இறங்குவதாக நினைத்து காரை ஓட்டின் மேல் ஏற்றிய போது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பொன்சேகர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். மற்றவர்களான ரஜினி மற்றும் ரெனிஸ் ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயங்களுடன் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டனர்.

இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News