உவரியில் விசா இல்லாமல் சுற்றி திரிந்த வெளிநாட்டு முதியவர் கைது

நெல்லை மாவட்டம் உவரியில் விசா இல்லாமல் சுற்றித் திரிந்த அமெரிக்க முதியவர் கைது.

Update: 2022-04-20 11:47 GMT

பைல் படம்.

விசா இல்லாமல் தமிழகத்தில் சுற்றித் திரிந்து அமெரிக்க முதியவர் நெல்லை மாவட்ட உவரியில் கைது.

நெல்லை மாவட்டம் உவரி சுற்றூலா தளமாகும். இங்கு சுமார் 60 வயது மிக்க தக்க வெளிநாட்டு முதியவர் கடந்த 2 தினங்களாக சுற்றித் திரிவதாக பொதுமக்கள் உவரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதனடிப்படையில் உவரி போலீசார் உவரி செக் போஸ்டில் வைத்து அந்த வெளிநாட்டு முதியவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் அமெரிக்காவைச் சேர்ந்த வெரிட் என்ற ஸ்பெக்சட் என்பதும் அவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்றும் இவர் கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி சுற்றுலா விசாவில் டெல்லியில் இறங்கி பின்பு மும்பை வழியாக ஒவ்வொரு இடமாக சுற்றி பார்த்து விட்டு தமிழகம் வந்திருக்கிறார். தனது விசா காலம் மார்ச் 31ம் தேதி முடிவடைந்த நிலையில் அவர் தொடர்ந்து இன்று வரை ஒவ்வொரு சுற்றுலா தளமாக சுற்றி திரிந்தது தெரிய வந்தது. இந்நிலையில் போலீசார் இந்திய அமெரிக்கா தூதரகத்தை தொடர்பு கொண்டு தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News