திசையன்விளையில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிப்பு

திசையன்விளை யில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிப்பு

Update: 2021-12-25 06:57 GMT

திசையன்விளை யில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிப்பு.

திசையன்விளை யில் அ. தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. திசையன்விளை பழைய பேருந்து நிலையம் அருகில் முன்னாள் முதல்வர் பாரத ரத்னா எம். ஜி. ஆரின் 34 வது நினைவு நாள் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் தலைமையில் நடந்தது. அ.தி.மு.க. நிர்வாகிகள் எம். ஜி. ஆர். படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே. செல்வராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜான்சி ராணி, முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் டிம்பர் டி. செல்வராஜ்,நகர அம்மா பேரவை செயலாளர் வி.பி.ஜெயகுமார், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நவீன் முத்து சரவணன்,அ.தி.மு.க. நிர்வாகிகள் பிரதீப் ஸ்வீட்ஸ் முருகன் ,தர்மசீலன்,பிரதீஸ்குமார், செல்வன் அல் அமீன் முகம்மது அலி,லிங்க துரை ,வக்கீல் ஜேம்ஸ் செளந்தர்ராஜன், ரஞ்சித் சிங்,செந்தில், ஜேசுராஜன்,அய்யாகுட்டி,பி.எல்.ஆர். லிங்க ராஜ்,தியாகராஜன், முருகேசன்,லிங்கம்,மணலி ராஜா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News