அதிமுக உள்கட்சி தேர்தல்: பணகுடியில் கட்சியினர் விருப்ப மனு அளிப்பு

அதிமுக உள்கட்சி தேர்தலை முன்னிட்டு விருப்ப மனு படிவங்களை தேர்தல் பொறுப்பாளர் குறிஞ்சிமணி போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் பெற்றுக்கொண்டார்.

Update: 2021-12-13 12:19 GMT

பணகுடி பேரூராட்சியில் விருப்ப மனு அளித்த அதிமுகவினர்.

நெல்லை மாவட்டம், வள்ளியூர் ஒன்றியம் பணகுடி பேரூராட்சியில் அதிமுக உள்கட்சி அமைப்பு தேர்தலை முன்னிட்டு விருப்ப மனு படிவங்களை தேர்தல் பொறுப்பாளர் குறிஞ்சிமணி போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் பெற்றுக்கொண்டார்.

நெல்லை மாவட்டம், வள்ளியூர் ஒன்றியம் பணகுடி பேரூராட்சியில் அதிமுக உள்கட்சி அமைப்பு தேர்தல் சங்கனாபுரத்தில் பணகுடி பேரூராட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் குறிஞ்சிமணி தலைமையிலும், ராஜலிங்கம் முன்னிலையிலும் நடைபெற்றது.

பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கும் தனி தனியாக ஏராளமான நிர்வாகிகள் விருப்ப மனு பெற்றுக் கொடுத்தனர்.

நிகழ்ச்சியில் வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் அழகானந்தம், அவை தலைவர் சீனிவாசன் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News