உவரியில் கொரோனா விழிப்புணர்வு - சாலையில் ஓவியம் வரைந்த காவல்துறையினர்.

கொரோனா விழிப்புணர்வு - மாற்றி யோசித்த காவல்துறை.

Update: 2021-05-19 17:46 GMT

உவரியில் காவல்துறைனர் சாலையில் வரைந்த விழிப்புணர்வு ஓவியம்.

உவரியில் காவல்துறையினர் சாலையில் ஓவியம் வரைந்து  பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க நெல்லை மாவட்டம் உவரியில் காவல்துறையினர் சார்பில் சாலையில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கொரோனாவை ஒழிப்போம்.என்ற வாசகங்கள் , கொரோனா வைரஸ் போன்ற உருவங்களை வரைந்து மக்களுக்கு விழிப்புணர்வை நெல்லை மாவட்ட காவல்துறையினர் ஏற்படுத்தி வந்தனர்.

Tags:    

Similar News