நெல்லையில் மீலாடிநபியையாெட்டி புகைப்பட கண்காட்சி, நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மேலப்பாளையத்தில் மீலாடி நபியை முன்னிட்டு இஸ்லாமிய புகைப்பட கண்காட்சி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Update: 2021-10-19 05:23 GMT

மீலாடி நபியை முன்னிட்டு மேலப்பாளையத்தில் இஸ்லாமிய புகைப்படக் கண்காட்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மீலாடி நபியை முன்னிட்டு மேலப்பாளையத்தில் இஸ்லாமிய புகைப்படக் கண்காட்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.

இஸ்லாமியர்களின் இறை தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மீலாடி நபி விழாவாக கொண்டாடபடுகிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட மீலாது கமிட்டி சார்பில் 15வது ஆண்டாக இஸ்லாமிய புகைப்பட கண்காட்சி, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பாரம்பரிய சிலம்பாட்டம் நிகழ்ச்சி மேலப்பாளையம் பஜார் திடலில் வைத்து நடைபெற்றது.

செய்யிதினா உசேன் தங்கள் ஜாலாலில் புகாரி கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார். அஸ்கர் அலி தங்கள் ஜலாலில் புகாரி ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகளை வழங்கினார். கவுதுல் ஆலம் வாத்தியாரின் தலைமையில் பாரம்பரிய சிலம்பாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட மீலாது கமிட்டி அமைப்பாளர் விஎஸ்டி அமானுல்லா செய்திருந்தார்.

Tags:    

Similar News