வள்ளயூரில் 3 வழித்தடங்களில் பேருந்து சேவை: சபாநாயகர் துவக்கி வைப்பு

வள்ளியூரில் இருந்து மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள புதிய வழித்தடத்தில் பேருந்துகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

Update: 2021-12-29 13:25 GMT

வள்ளியூரிலிருந்து பெட்டைகுளம், கடற்கரை கிராமமான கூத்தன்குழி வரையிலான புதிய வழித்தடத்தில் பேருந்துகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரிலிருந்து பெட்டைகுளம் வரையிலும் மற்றும் வள்ளியூரிலிருந்து கூத்தன்குழி வரையிலான மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள புதிய வழித்தடத்தில் பேருந்துகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரிலிருந்து பெட்டைகுளம், கடற்கரை கிராமமான கூத்தன்குழி வரையிலான புதிய வழித்தடத்தில் பேருந்துகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். வள்ளியூர் பேருந்து நிலையத்தில் இருந்து கூத்தென்குழி மற்றும் பெட்டைகுளத்திற்கு புதிய வழித்தடத்தில் மூன்று நகர பேருந்துகள் இயக்கப்பட்டன.

பெண்கள் கட்டணமின்றி செல்லும் இந்த நகர பேருந்துகளை சபாநாயகர் அப்பாவு கொடியசைத்து தொடங்கி வைத்தார். சபாநாயகர் அப்பாவு மற்றும் திமுக பிரமுகர்கள் அந்த பேருந்தில் ஏறி சிறிது தூரம் பயணம் செய்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், திமுக பிரமுகர் கணேஷ்குமார் ஆதித்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News