மூதாட்டி தவற விட்ட ரூ.5,000 பணத்தை மீட்டு காெடுத்த காவல் உதவி ஆய்வாளர்

நெல்லை அரசு மருத்துவமனையில் மூதாட்டி தவற விட்ட 5,000 ரூபாய் பணத்தை மீட்டு பத்திரமாக ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளர்.

Update: 2022-06-24 14:02 GMT

நெல்லை அரசு மருத்துவமனையில் மூதாட்டி தவற விட்ட 5,000 ரூபாய் பணத்தை மீட்டு பத்திரமாக ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன்.

நெல்லை அரசு மருத்துவமனையில் மூதாட்டி தவற விட்ட 5,000 ரூபாய் பணத்தை மீட்டு பத்திரமாக ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளரின் மனிதாபிமான செயல் பாராட்டை பெற்றுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் சுப்ரமணி இவருக்கு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் குடல் வால்வு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எனவே சுப்ரமணியின் தாயார் முத்துலட்சுமி உடனிருந்து அவரை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் முத்துலட்சுமி செலவிற்காக வைத்திருந்த 5000 ரூபாய் பணத்தை மருத்துவமனை வளாகத்தில் தவற விட்டுள்ளார். அதேசமயம் மருத்துவமனை வளாகத்தில் பணியில் இருந்த ஹைகிரவுண்ட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலமுருகன் 10, 500 ரூபாய் தாள்கள் வீதம் மொத்தம் 5,000 ரூபாய் கீழே கிடப்பதை கண்டு அதை எடுத்து பத்திரமாக வைத்துள்ளார்.

இதற்கிடையில் மூதாட்டி முத்துலட்சுமி தான் தவறவிட்ட பணத்தை மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடி அலைவதை அறிந்த உதவி ஆய்வாளர் பாலமுருகன் மூதாட்டியிடம் விவரத்தை கேட்டுள்ளார். விசாரணைக்கு பிறகு தான் எடுத்து வைத்திருந்த பணம் மூதாட்டியின் பணம் என்பது தெரியவந்தால் உதவி ஆய்வாளர் பாலமுருகன் அந்த பணத்தை முத்துலட்சுமியிடம் ஒப்படைத்தார். பணத்தைப் பெற்றுக்கொண்ட மூதாட்டி காவலருக்கு நன்றி தெரிவித்துச் சென்றார். காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகனின் இச்செயல் சமூக ஆர்வலர்கள் இடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

Tags:    

Similar News