விதிமுறைகளை மீறி விற்பனை - ஜவுளி கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்.

அரசு உத்தரவை மீறி கடையைத் திறந்து வைத்து வியாபாரம் செய்ததால் சுகாதார ஆய்வாளர் சீல் வைத்தார்.

Update: 2021-05-20 06:55 GMT

ஷோபனா டெக்ஸ்டைல்ஸ் -பாளையங்கோட்டை

பாளையங்கோட்டையில் விதிமுறைகளை மீறி திறந்து விற்பனை செய்த ஜவுளி கடைக்கு சீல் வைத்தனர்

நெல்லை பாளையங்கோட்டை காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள ஷோபனா டெக்ஸ்டைல்ஸ் கடை தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தடை உத்தரவு மற்றும் தொற்று நோய் பரவல் அமலில் இருக்கும் போது அரசு உத்தரவை மீறி கடையைத் திறந்து வைத்து வியாபாரம் செய்ததால் சுகாதார ஆய்வாளர் முருகன் , பாளையங்கோட்டை காவல் துறையினரும் ஷோபனா ஜவுளி கடைக்கு எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டி சீல் வைத்தனர்

Tags:    

Similar News