திருநெல்வேலியில் அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டலத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டலத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் இன்று பணிமனையில் வைத்து இலவச கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்த தடுப்பூசி முகாமினை அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி மண்டல மேலாளர் சரவணன்,துணை மேலாளர் அழகர்சாமி ஆகியோர் துவக்கி வைத்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.தொடர்ந்து அனைத்து போக்குவரத்து பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழக மக்கள் தொடர்பு அதிகாரி முருகேசன் செய்திருந்தார்.