நெல்லையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்த 9 பேர் மீது வழக்கு,வாகனங்கள் பறிமுதல்-மாவட்ட காவல்துறை நடவடிக்கை

Update: 2021-06-08 03:09 GMT

திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம்.

ஊரடங்கு விதிமுறைகளை மீறி சாலையில் சுற்றித்திரிந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 9 வாகனங்கள் பறிமுதல் செய்து மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

கொரோனா நோய் தொற்று பரவல் அதிவேகமாக பரவி வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவுபடி ஊரடங்கு விதிகளை மீறுவோர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கும் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 7ம் தேதி மட்டும் விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 9 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாத 516 நபர்கள் மீதும் சமூக இடைவெளியை பின்பற்றாத 6 நபர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Similar News