திருநெல்வேலி - சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 15 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற 15 பேர் கைது .

Update: 2021-05-22 10:07 GMT

நெல்லையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .மணிவண்ணன்    சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 19.05.2021-ம் தேதி முதல் 21.05.2021 தேதி வரை தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை  TNP Act (Tamilnadu Prohibiton Act)-ன் கீழ் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 286 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News