நான்குநேரி அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது

நாங்குநேரியில் ஸ்ரீரடி சாய்பா அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் முக கவசம் இலவசமாக வழங்கப்பட்டது

Update: 2021-05-23 11:01 GMT

நான்குநேரி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் ஸ்ரீரடி சாய் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர், முககவசம் வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் நான்குநேரி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஸ்ரீரடி சாய் அறக்கட்டளை சார்பில் தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தான கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சாய் அறக்கட்டளை செயலாளர் சண்முக சுந்தரம் தலைமை வகித்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசத்தை இலவசமாக வழங்கினார். அப்போது ஏராளமான பொதுமக்கள் தாமாக முன்வந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து கபசுர குடிநீரை பெற்று சென்றனர். இந்த நிகழ்சியில் நான்குநேரி டவுன் பஞ்., ஊழியர்கள், ஸ்ரீரடி சாய் அறக்கட்டளை உறுப்பினர்கள் பலரும் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.



Tags:    

Similar News