நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து ஆறு நாட்கள் கோவில்கள் மூடல்: பக்தர்கள் வேதனை

நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பாபநாசம் கோவில், காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் தொடர்ந்து ஆறு நாட்கள் மூடப்பட்டன.

Update: 2021-10-05 10:26 GMT

நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான பாபநாசம் பாபநாசர் சுவாமி திருக்கோவில் மற்றும் காரையார், சொரிமுத்து அய்யனார் திருக்கோவில்களில் மகாளய அமாவாசை சிறப்பாக கொண்டாடப்படும். இக்கோயில்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளியூர் மற்றும் உள்ளுர் பக்தர்கள் வருகை புரிவர்.

ஆனால் தற்பொழுது கொரொனா நோய் தொற்று காரணமாக வாரத்தில் மூன்று நாட்கள் கோவில்கள் திறக்கப்படாத நிலையில் தற்போது மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்கள் கோவில்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாரத்தில் மூன்று நாட்கள் ஏற்கனவே கோவில்கள் அடைப்பு நடைமுறையில் உள்ளதால் தொடர்ந்து இன்று முதல் வருகின்ற 10ம் தேதி வரை ஆறு நாட்கள் கோவில்கள் அடைக்கப்படும் என்றும் இந்த நாட்களில் தாமிரபரணி ஆற்றில் நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையறியாமல் இன்று வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தொடர்ந்து நோய்த் தொற்றை காரணம் காட்டி கோவில்கள் மூடப்பட்டு வருவது பக்தர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News