தேசிய புலிகள் கணக்கெடுக்கும் பணி: களப் பணியாளர்களுக்கு பயிற்சி
களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி துவங்கப்படவுள்ள நிலையில் களப் பணியாளர்களுக்கு பயிற்சி.
ஐந்தாவது தேசிய புலிகள் கணக்கெடுப்பு பணிக்கான களப்பயிற்சியை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா துவக்கி வைத்தார்.
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐந்தாவது தேசிய புலிகள் கணக்கெடுப்பு பணி துவங்கப்படவுள்ளது.
இதனையொட்டி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா IFS வனத்துறை ஊழியர்களுக்கு எவ்வாறு புலிகளை கணக்கெடுப்பது என்ற பயிற்சியை களப் பணியாளர்களுக்கு களப்பயிற்சியை துவக்கி வைத்தார்.