முக்கூடல் கடையில் பணம் பொருள் திருட்டு

முக்கூடலில் பூட்டிய கடையில் பணம், பொருள் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2021-05-05 06:00 GMT

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள முக்கூடல் ராஜாங்கம் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (65) இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார் சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார்.

இதை நோட்டம்மிட்ட மர்ம நபர்கள் கடையின் மேலற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்தனர் அங்கு இருந்த 2.500 பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றதக கூறப்படுகிறது.

மேலும் கடை உரிமையாளர் காலையில் கடையை திறந்து பார்த்த போது பொருட்கள் திருடப்பட்டுருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமசாமி உடனே முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்முக்கூடலில் பூட்டிய கடையில், பணம், பொருள் திருட்டு

Tags:    

Similar News