பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 9 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 9 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

Update: 2021-10-20 14:45 GMT

பைல் படம்

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்பது ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளது இதில் திமுக 8 இடங்களை கைப்பற்றியது. திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிமுக போட்டியிட்ட எந்த ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மன்ற கூடத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இதில் 1வது வார்டு மாரிமுத்து, இரண்டாவது வார்டு சமாதானம், 3வது வார்டு புஷ்பம், நாலாவது வார்டு வளர்மதி, 5-ஆவது வார்டு சுப்புலட்சுமி, ஆறாவது வார்டு பிரியா, ஏழாவது வார்டு செல்வி, எட்டாவது வார்டு பூங்கோதை, ஒன்பதாவது வார்டு சோழமுடி ஆகியோர் ஒன்றிய கவுன்சிலர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

ஒன்றிய கவுன்சிலர்களுக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Tags:    

Similar News