சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த 11 நபர்கள் கைது

Update: 2021-04-21 13:29 GMT

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். மணிவண்ணன் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து 18.04.2021-ம் தேதி மற்றும் 20.04.2021 தேதி அன்று தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 11 நபர்களை TNP Act -ன் கீழ் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 64 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News